ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவன்
மராட்டிய மாநிலம் மும்பையில் 10-ம் வகுப்பு மாணவர் ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் முபாஷிரா சாதிக் சையத் என்ற மாணவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்நிலையில், அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, நடக்க முடியாத நிலையில் ஆம்புலன்சில் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுதினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது விடாமுயற்சிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags :