கல் குவாரியில் மூழ்கி மாணவர் பலி
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்மகன் பரத், 19. இவர், ராமாபுரம் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி. இ. , பயோமெடிக்கல் பிரிவு படித்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, சக மாணவர்கள் வெங்கடேசன், சிவகணேசன், விஷால் கார்த்திக்கேயன் ஆகியோருடன், கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றார்.அங்கு, பரத் ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் மூழ்கினார். தகவலறிந்து, காயார் போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்தனர்.தீயணைப்பு வீரர்கள், இரவு 11:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.
பின், நேற்று காலை 10:00 மணிக்கு மெரினா கடற்கரை கமாண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தேடி பரத்தை சடலமாக மீட்டனர்.காயார் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :