கல் குவாரியில் மூழ்கி மாணவர் பலி

by Staff / 21-03-2023 04:04:14pm
கல் குவாரியில் மூழ்கி மாணவர் பலி

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்மகன் பரத், 19. இவர், ராமாபுரம் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி. இ. , பயோமெடிக்கல் பிரிவு படித்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, சக மாணவர்கள் வெங்கடேசன், சிவகணேசன், விஷால் கார்த்திக்கேயன் ஆகியோருடன், கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றார்.அங்கு, பரத் ஆழமான பகுதிக்கு சென்றபோது, ​​நீரில் மூழ்கினார். தகவலறிந்து, காயார் போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்தனர்.தீயணைப்பு வீரர்கள், இரவு 11:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.
பின், நேற்று காலை 10:00 மணிக்கு மெரினா கடற்கரை கமாண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தேடி பரத்தை சடலமாக மீட்டனர்.காயார் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via