தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தந்தை சடலம் முன்பு தாலி கட்டிய மகன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மகன் பிரவீனுக்கு வரும் 27ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மகனின் திருமணத்தைப் பார்க்காமலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தந்தையின் சடலம் முன்பு அவரது மகன் பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சொர்ணமால்யா என்ற பெண்ணின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்று இறந்து தந்தை ராஜேந்திரன் சடலத்தின் முன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :