நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து - கார்கே

by Staff / 08-02-2024 02:38:37pm
நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து - கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசுக்கு எதிராக கறுப்பு அறிக்கை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏ-கள் பாஜகவால் பறிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ காங்கிரஸ் ஆட்சிகளை பாஜக கவிழ்த்துள்ளது. அவர்கள் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றனர். பாஜக ஒருபோதும் பேசாத வேலையில்லாத் திண்டாட்டத்தின் முக்கியப் பிரச்னையை நாங்கள் எழுப்புகிறோம். கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது என அவர் குற்றஞ்சாட்டினார்.

 

Tags :

Share via