ரயிலில் அடிபட்டுதாய் மகள் இருவர் பலி

by Staff / 21-03-2023 04:37:13pm
 ரயிலில் அடிபட்டுதாய் மகள் இருவர் பலி

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சாமலாபுரம் பரமசிவம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி உரிமையாளர் சரவணன். தனலட்சுமி என்ற மனைவியும் 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர், சரவணன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம், அதேபோல நேற்று இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இதனால் மணமுடைந்த லட்சுமி தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. வெளியேறிய இருவரும் இரவு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளனர், இதனால் சந்தேகமடைந்த பரமசிவம் இரவு முழுவதும் இருவரையும் தேடியுள்ளார், இந்நிலையில் சோமனூர் ரயில்வே பாலம் அருகே இருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக பரமசிவனுக்கு தகவல் கிடைத்தது, அங்கு சென்று பார்த்த போது ரயிலில் அடிபட்டு கிடந்தது அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகள் என தெரிய வந்தது, இதையடுத்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக திருப்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல், தகவலின் பேரில் திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாயும் மகளும் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via