ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி வாய்ப்பை இழந்தது.

by Admin / 22-03-2023 10:55:20pm
ஆஸ்திரேலியாவிடம் இந்தியா  21 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி வாய்ப்பை இழந்தது.

சென்னையில் நடந்த  மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி எம்எசி மைதானத்தில் இன்று சரியாக 1.30 மணி அளவில் தொடங்கியது டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது களத்தில் இறங்க..... இந்திய அணி பந்து வீச்சை மேற்கொள்ள ....ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி 270 ரன்கள் இந்தியாவினுடைய வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புகளில்  கோலியினுடைய ஆட்டத்தை நம்பியே இந்தியா தன்னுடைய பயணத்தை தொடர்ந்த பொழுது அவரின் இணையாக ஆடிய கே.எல்.. ராகுல் பவுன்றி அருகில் விக்கெட்டை இழந்தார். அவருக்கு அடுத்து வந்த ஹ ர்த்திக் பாண்டியா , சூரியகுமார் யாதவ் , சடேஜா என  அடுத்து அடுத்து இந்தியாவினுடைய விக்கெட் விழ ..இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது .248 ரன்களில் இந்தியா குல்தீப் யாதவனுடைய விக்கெட்டை இழந்து 21 ரன்கள் வித்தியாசத்தில்  ஆஸ்திரேலியாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.  மூன்று  ஒரு நாள் போட்டியில்  இரண்டை வென்ற ஆஸ்திரேலியா  ஒரு நாள் தொடரை  இந்திய மண்ணில் வென்றது  .ஆஸ்திரேலியாபேட்டிங்லும் பில்டிங்கிலும் மிகச் சிறப்பாக விளையாடியதை இந்திய ரசிகர்கள் குறிப்பாக , சென்னைவாசிக ள்நன்கு கண்டு களித்தனா்.  மூன்றாவது, ஒருநாள் போட்டியை கண்ட இந்தியர்கள்  நூறு ரன்னில்  இருந்தே உறைந்து போயிருந்தார்கள். வெற்றி  பெறுவோம் என்கிற நம்பிக்கையை கோலி கொடுத்த பொழுது  அடுத்தடுத்து  வந்த வீரர்கள் தங்களுடைய விக்கெட்டை இழந்து  வெளியேறியதால் ..இந்தியாவினுடைய வெற்றி பறிபோனது..  கொஞ்சம் கவனமாக, இந்திய வீரர்கள் விளையாடியிருந்தால், இந்தப் போட்டியிலும்  இந்தியா வென்று இந்த மூன்று ஒரு நாள்  கொண்ட   போட்டியில் கோப்பையை  வென்றிருக்கும்.

 

Tags :

Share via