முடிசூடா மன்னனாக இருந்தேன்.. ஜெயக்குமார் வருத்தம்

by Staff / 14-04-2024 04:29:30pm
முடிசூடா மன்னனாக இருந்தேன்.. ஜெயக்குமார் வருத்தம்

2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேத்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வியடைந்தோம் என பாஜகவினர் கூறுகின்றனர் என்ற கேள்வியை முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது, அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் எங்கள் ஆட்சியே பறிபோனது என கூறியுள்ளார். நானெல்லாம் ராயபுரத்தில் தோற்கிற ஆளா? வெளிப்படையாக சொல்கிறேன் 25 ஆண்டுகளாக ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வியே காணாத ஆள் நான். பாஜகவால் தோற்றேன் கூறியுள்ளார். பாஜக இல்லையென்றால் நான் சட்டமன்றத்தில் இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via