வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர்

by Staff / 23-03-2023 03:21:02pm
வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர்

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெள்ளாளபுரம் கிராமம், காட்டுவளவில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு சேமிப்புக்கிடங்கில் நேற்று மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெள்ளாளபுரம் சன்னாசிக் கடை பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் உயிரிழந் தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் கடுமையான காயங்களுடன் சேலம் அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டம், எடப் பாடி வட்டம், வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த வேடப்ப னுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள் ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தின ருக்கு 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்த வேடப்ப னுக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via