ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...?
திருச்சி மாவடடம், மணப்பாறை அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 26). வடை, பஜ்ஜி போடும் பலகார மாஸ்டராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவைக்கு வேலைக்குச் சென்ற இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டினுள் தூக்கிபோட்டுள்ளார். உயிருக்கு போராடியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான வில்சன் கடன் வாங்கி ரம்மியில் பணத்தை இழந்த நிலையில் கடன் பிரச்சினையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Tags :