கனரக லாரி கார் மீது மோதியது கார்அப்பளம் போல் நொறுங்கியது.
செங்கல்பட்டு: பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ஜூட் (48). இவர் மின் தூக்கி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். வீட்டிற்கு தனது காரில் செல்லும்போது கிருஷ்ணமூர்த்தி (48), தேவா (23), ராஜா (25) ஆகியோர் உடன் வந்துள்ளனர். கார் வண்டலூர் மேம்பாலத்தின் கீழே உள்ள சிக்னலில் நிற்பதற்காக மெதுவாக ஓட்டி வந்துள்ளார். அப்போது கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்திற்கு எம்.சாண்ட் ஏற்றி சென்ற கனரக லாரி கார் மீது அதிவேகமாக மோதியது. இதில் முன்னால் நின்று கொண்டிருந்த சிலிண்டர் ஏற்றிச்சென்ற மினி லாரி மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.
Tags :