பெண்களின் படங்களை மார்பிங் செய்தவர் தற்கொலை

by Staff / 28-03-2023 01:25:50pm
பெண்களின் படங்களை மார்பிங் செய்தவர் தற்கொலை

கேரளாவின் கண்ணூரில் பெண்களின் படங்களை ஆபாசமான படங்களாக மார்பிங் செய்து பரப்பிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த இருவரில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற சக குற்றவாளி ஆபத்தான நிலையில் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முரளிதரன் (46) என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அபினவ் (25) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் இருந்து உள்ளூர் பெண்களின் புகைப்படங்களை சேகரித்து, அவற்றை ஆபாசமான படங்களாக மாற்றி, டெலிகிராம் மூலம் பரப்பியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via