கப்பலில் தீ விபத்து.. நடுகடலில் 31 பேர் பலி

by Staff / 31-03-2023 11:44:56am
கப்பலில் தீ விபத்து.. நடுகடலில் 31 பேர் பலி

பிலிப்பைன்சில் பசிபிக் பெருங்கடலில் பயணித்த லேடி மேரி ஜாய்-3 பயணியர் கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் இருந்து ஜோலோ நகருக்கு எம்.வி லேடி மேரி ஜாய் - 3 என்ற கப்பல் 250 பயணியருடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்நிலையில், கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் கடலில் குதித்தனர். மேலும், இந்த விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மாயமான ஏழு பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via