நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அனுமதிக்காது - உதயநிதி தகவல்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாளை சட்ட மன்றத்தில் பேச உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் வடசேரி, மகா தேவபட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவண்கோட்டை, கீழ்க்குறிச்சி ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் நிம்மதி பெருமூச்சு அடைய செய்துள்ளது
Tags :