தமிழகத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கேபிசி நகர் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். உயிரிழந்த முதியோரின் மனைவியும் கொரோனாவுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Tags :