பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மற்றுமொரு வழக்கு.

by Editor / 06-04-2023 08:24:35pm
பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மற்றுமொரு வழக்கு.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. இவர் குழித்துறையை  தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துவந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக இவர் பொறுப்பேற்றார். இதனிடையே, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் ஒரு வீடியோ மட்டுமின்றி பல பெண்களுடன் புகைப்படம், ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் புகாரில் சிக்கிய பெனடிக்ட் ஆன்றோ மீது, அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் அவர் தலைமறைவானார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்குப்பதிவு செய்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவைத்தேடி வந்த நிலையில்  அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் உள்ள பால் பண்ணை பகுதியில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக் ஆன்றோ  மீது மேலும் ஒரு வழக்கு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ளனர். பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ  மீது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாதிரியார் பெனடிக் ஆன்றோமீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவாகும்.

 

Tags :

Share via