தம்பி மனைவியை எரித்துக் கொன்ற அண்ணன்
குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது தம்பி மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்த கொடூரம் நடந்துள்ளது. பிரகாஷ் என்ற நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி நிர்மலா தனது குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது தம்பியின் மரணத்திற்கு நிர்மலாதான் காரணம் என நினைத்த பிரகாஷின் அண்ணன் சுரேஷ், நிர்மலாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளார்.
Tags :