.8, 9 தேதிகளில் பிரதமர் வருகை 15,000 காவலர்கள் பாதுகாப்பு

by Editor / 07-04-2023 07:38:30am
.8, 9 தேதிகளில் பிரதமர் வருகை  15,000 காவலர்கள் பாதுகாப்பு

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு ஏப்.8ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வந்தடைகிறார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை,தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர புதிய ரயில்சேவை உள்ளிட்டவைகளை  தொடங்கி வைக்கவுள்ளார். இதனையொட்டி சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இந்த 2 நாட்களும் சென்னையில் ட்ரோன் காமிராக்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : modi

Share via