25 பெண்கள் படுகாயம்... தலைகுப்புற கவிழ்ந்த வேன்

by Staff / 11-10-2022 03:48:45pm
25 பெண்கள் படுகாயம்... தலைகுப்புற கவிழ்ந்த வேன்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் தனியார் ஆயுத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பணி முடிந்து, நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கீழாந்தூர் பகுதியை நோக்கி வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகீழ் கவிழ்ந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர், அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via