புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்

by Staff / 08-04-2023 05:09:44pm
 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சென்னை-கோவை இடையே இயங்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு வந்தார். இதனையடுத்து, கார் மூலமாக சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாஜகவினர் பூ தூவியும், கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் கோலாகலமாக வரவேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via