மைத்திரேயன் பாரதிய ஜனதாகட்சியில் இணைய உள்ளார் .
அதிமுகவினுடைய முன்னாள் ராஜ்யசபா எம்பியாக இருந்த மைத்திரேயன் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்னால் அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். அதற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினாா். அங்கு அவருடைய செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து நீக்கப்பட்டார். கொஞ்ச காலம் எந்த கட்சியிலும் பணியாற்றாமல் இருந்த மைத்திரேயன் திமுகவில் இணைவார் என்கிற பேச்சு உருவானது.: கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க.து ஆனால் , அவர் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார் என்றும் அதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. பாரதிய ஜனதாவினுடைய மாநில தலைவர் அண்ணாமலை தற்பொழுது டெல்லியில் இருப்பதால் மைத்ரேயன் பாரதிய ஜனதாவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.. 2000ஆம் ஆண்டில் மைத்ரேயன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார் என்பது நோக்கத்தக்கது...
Tags :