மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு

by Staff / 11-02-2023 05:40:28pm
மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை பகுதியைச் சேர்ந்தவர் காளியண்ணன் மகன் நகல்ராசு வயது 49. இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று கேரளாவில் இருந்து மரப்பட்டை லோடு ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மூலிமங்கலம் பகுதியில் செயல்படும் தன்யா நிறுவனத்தில் இறக்குவதற்காக சென்று உள்ளார். லோடு இறக்குவதற்காக லாரியின் மேல் கட்டப்பட்டிருந்த தார்ப்பாயை அவிழ்ப்பதற்காக மேலே சென்றபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் சென்ற மின்சாரகம்பி மேலே பட்டு மின்சாரம் தாக்கி லாரியின் மீது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்த நகல்ராசு மனைவி சுதா வயது 35 என்பவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via