"சிவசங்கர் பாபா" மேலும் ஒரு வழக்கில் கைது

by Editor / 24-07-2021 11:19:09am

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்திவரும் சிவசங்கர் பாபா கடவுளின் பெயரால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதையடுத்து அவரை டெல்லியில் வைத்து தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர. கடந்த 18 ஆம் தேதி உடல்நில குறைவு காரணமாக அவரை சிறைத்துறை அதிகாரிகள் அவரை செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதையடுத்து இரண்டு வாரம் முன்பு சிகிச்சை முடிந்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். பிறகு அவர் தங்கியிருந்த ஆசிரம வளாகத்தில் காவல்துறையினர் முகாமிட்டு சோதனை நடத்தியதில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் ட்ரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவருடைய இ-மெயில் கணக்கில் அவர் மாணவிகளுக்கு ஆபாசமாக சாட் செய்தது சிபிசிஐடி காவல் துறையினரிடம் சிக்கியது.

மேலும் அவர் மாணவியுடன் வீடியோ காலில் பேசிய அணைத்து ஆதாரமும் தற்போது சிக்கியுள்ளது. இதையடுத்து அவர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இ-மெயில் கணக்கை சிபிசிஐடி காவல்துறையினர் முடக்கினர். சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

Tags :

Share via