தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழைபெய்ய வாய்ப்பு.

by Editor / 05-11-2023 10:44:24pm
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழைபெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருந்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Tags : தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

Share via