சிறுவர் சிறுமியர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் தொடரும் பாலியல் வன்முறைகள்

by Admin / 16-04-2023 08:10:04pm
சிறுவர் சிறுமியர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் தொடரும் பாலியல் வன்முறைகள்

சிறுவர் சிறுமியர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் தொடரும் பாலியல் வன்முறைகள் உலகமெங்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன  வெளிநாட்டில் ஆறு  பெண்  ஆசிரியர்கள்  பள்ளியில்  படிக்கும் மாணவர்களோடு  உடலுறவு கொண்டதாக  கைது செய்யப்பட்டு  இருக்கிறார்கள் .

.தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு இதுபோன்ற செய்திகள் சிறுமி பாலியல் பலாத்காரம்  கைதானவர் 50க்கும் மேற்பட்ட வயதை உடையவர். மிட்டாய் கொடுத்து மாணவி சிறுமி பலாத்காரம்  63 வயது சேர்ந்தர் கைது.தோ்வரையில். மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது என்று தினம் தோறும் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று இல்லாமல் தொடர்ச்சியாக சிறுவர், சிறுமிகள்,. மாணவிகள், பெண்கள் என பாலியல்  வன்முறை தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கிறது

. . காலங்காலமாக  பெண்ணோடு பிறந்து  பெண்ணோடு வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கப்படுகின்ற இந்த கொடுமைகள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் .என்னதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலையில் ஆண்கள் இருந்தாலும்  ஒரு குடும்பத்தை ஒரு குலத்தை  உருவாக்குகின்ற பொறுப்பும் கடமையும் பெண்களிடம் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கின்ற பெண்கள், சாதாரணமாக மிக கீழ்த்தரமான  முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவது வேதனை அளிக்கின்றது

.பெற்றோர்கள் இன்றைக்கு  பொருளாதாரத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வேலைகளை தேடி ஓட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். பாதுகாப்பான இடமாக பள்ளிக்கூடமும் உறவுகளினுடைய வீடுகளும் இருக்கும் என்று நம்பித்தான் அவர்களை விட்டு விட்டு செல்கிறார்கள். ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளை மாபாதகம் மனம் கொண்ட வயது முதிர்ந்த படித்த மிருகங்களால் வேட்டையாடப் படுகிற பொழுது,  இந்த சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்கிற வேதனை அளிக்கின்றது .

பெரும்பாலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் எதிராக நடக்கக்கூடிய இந்த பாலுறவு பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆசிரியர்களின்  அரவணைப்பில் அறிவுபெற வந்த குழந்தைகளை எல்லாம்  பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது ஆசிரியர் சமூகத்தின் சாபக்கேடு .பெற்றோர்களுக்கு, அடுத்தது பிள்ளைகள் அதிகமாக நெருக்கமாக தன் கருத்துக்களையும் தன்னுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிற ஒர் உயர்ந்த ஸ்தானத்தில் தான் ஆசிரியர்களை வைத்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஆசிரியர்கள் மாணவிகளின்  பலகீனத்தை அறிந்துகொண்டு அவர்களை வேட்டையாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தோன்றவில்லை.

 சாதாரண தளத்திலிருந்து, உயர்ந்த மட்டம் வரைக்கும் பெண்களின் உடல் சார்ந்த வேட்கையை அதிகப்படுத்தும் மிருகத்தனத்தின் வெளிப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது சமூகத்தின் ஆரோக்கியமற்ற போக்கை வழிப்படுத்துகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒரு கோட்பாட்டை உருவாக்கிய தமிழ் சமூகம் அதற்காகவே ராமாயணத்தில் ராமன் என்கிற கதாபாத்திரத்தின் மூலமாக கற்பு கோட்பாடு ஆண்களுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதிகாசங்கள் தோன்றின

.வரன் முறையற்ற புணர்ச்சி நிலையில் இருந்து ரத்த உறவுக்கு மாறிய பொழுது ,அண்ணன், தங்கை ,மாமன் மகள், மாமன் மகன், சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன் என்ற உறவு முறைகளை எல்லாம் பிரித்து யாரோடு ஒரு பெண் தன் உடல் ரீதியான இன்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வரையறுத்த சமுதாயத்தின் தொடர்ச்சி இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பெற்ற தகப்பனாலே சீரழிக்கப்படுகின்ற மகள்கள் உடன்பிறந்தாராலே சீரழிக்கப்படும் தங்கை என பாலுணர்வு நெருப்பு கழன்று எரிந்து கொண்டு, பாவம் ,இந்த பெண் பிள்ளைகளை எரித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறது. எத்தனை கனவுகளோடும் எத்தனை எதிர்பார்ப்புகளோடும் இந்த பெண் பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டு இருப்பார்கள். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வெறும் மிருகம் வேட்டையாடி புசிப்பது போன்று ஒரு பெண்ணை அவள் சம்மதம் இன்றி அவள் உடலை வேட்டையாடும் கொடூர மிருகமாக மனிதன் மாறியது எதன் பொருட்டு.

... நீதியும் நேர்மையும் கருணையும் அன்பும் காருண்யமும் பெருக்கெடுத்து ஓடிய, ஒரு சமுதாயத்தில். பெண் பிள்ளைகள்... கொண்டாடப்பட வேண்டியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், பரிதாபமாக காம உணர்வு கொண்ட சில வக்கிரம் பிடித்த மனிதர்கள் ஆண்டு அனுபவித்து இதுதான் என்பதை முழுமையாக தெரிந்து வயது முதிர்ந்தவர்களாலே, பாவம், இந்த சிறுமிகளும்  வாலிபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற இளம் பிள்ளைகளும் அநியாயமாக பலியாக்கப்படுவது வேதனைக்குரியதாகத்தான் இருக்கிறது

. கல்விச்சாலை தொட்டு ...கழனி வீடு வரைக்கும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.. சினிமா, அலுவலகம் என்று பணிபுாியும் தளங்களில் இந்த காமம் மிருகங்களிடம் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றுவது என்பது மிகக் கடினமாகத்தான் இருக்கின்றது. சமூகம் எதை நோக்கிப் போகிறது என்று தெரியாமல் தான் இருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள் .இன்றைக்கு அது நிரூபணம் ஆகி கொண்டிருக்கிறது.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், ஏதாவது திடீரென்று வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், பக்கத்து வீட்டில் இருக்கக்கூடிய முதிர்ந்தவர்களிடம் விட்டுவிட்டு செல்வார்கள் பெண் பிள்ளைகளை.. ஆனால், இன்றைக்கு சிறு குழந்தைகளை கூட விட்டு விட்டு செல்லக்கூடிய நிலை இல்லையே ..எங்கே சென்றது மனிதாபிமானம். யோசித்துப் பார்க்க வேண்டிய தருணத்தில் தான் நாம் நின்று கொண்டிருக்கின்றோம் .பணத்தைத் தேடித் தேடி ஓடுகின்ற இந்த சமூகம், பெண் பிள்ளைகளை வேட்டை மானாக துரத்திக் கொண்டே இருக்கின்றது. தன் இரைக்காக அடித்து புசிக்கின்ற விலங்குகளை போன்று, தனக்கு கீழே இருக்கின்ற பெண் பிள்ளைகளை வேட்டையாடும் வக்கிர புத்திகள். பதவி பணம் என்கிற திமிரோடு இருக்கின்றவர்கள்,

வயது முதிர்ந்த அடையாளத்தை வைத்து பல்வேறு சலுகைகளை பெற முயற்சிக்கும் பெரியவர்கள் கூட.. இந்த கேவலமான போக்குக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.. எல்லா இடங்களிலும் இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இதற்கு தீர்வு எப்பொழுது தான் கிடைக்கும்.

 

சிறுவர் சிறுமியர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் தொடரும் பாலியல் வன்முறைகள்
 

Tags :

Share via