திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்

by Staff / 17-04-2023 04:58:35pm
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள்  4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நேற்று திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் அதிகாலையில் இருந்து கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4. 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடரந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

 

Tags :

Share via