அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பெண் அதிகாரி

by Staff / 18-04-2023 12:21:42pm
அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பெண் அதிகாரி

பீகார் மாநிலம் பாட்னாவில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பாட்னா மாவட்டம் பிஹ்தாவில், சட்டவிரோதமாக மணல் கடத்திய சில மர்ம நபர்களை பெண் அதிகாரி ஒருவர் தடுத்துள்ளார். இது மணல் மாஃபியாவை கோபப்படுத்தியது. தடுத்து நிறுத்திய பெண் அதிகாரி கடுமையாக தாக்கப்பட்டு தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் இரண்டு சுரங்க அதிகாரிகளும் இந்த சம்பவத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via