வாடகைக்கு கொடுத்த கோழிபபண்ணையில் கோழி திருடிய உரிமையாளர் கைது.

by Editor / 19-04-2023 05:03:51pm
வாடகைக்கு கொடுத்த கோழிபபண்ணையில் கோழி திருடிய உரிமையாளர் கைது.

தென்காசி மாவட்டம் சுரண்டை ரெட்டைகுளம் பகுதியில் ரெட்டைக்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.இந்தபண்ணையையை அவர் சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.இந்த நிலையில் கோழிப்பண்ணையில் தொடர்ந்து கொழித்திருட்டு நடக்கவே கோழிப்பண்ணையில் மகேந்திரன் சிசிடிவி கேமரா மாட்டி கண்காணித்ததில் கடந்த 15ஆம் தேதியும்,அதன்பின்னர் 17 ஆம் தேதியான நேற்றுமுன்தினமும் கோழிகளை  திருடி இருசக்கரவாகனத்தில் கோழி பண்ணை உரிமையாளர் அருண்குமார்மற்றும் அவரது நண்பர் சுப்பையா ஆகிய இரண்டு நபர்களும் கொண்டுசெல்வது அந்தக்கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இதனைத்தொடர்ந்து கோழிப்பண்ணையை வாடகைக்கு எடுத்து நடத்திவரும் மகேந்திரன் சுரண்டை காவல்துறை ஆய்வாளர் சுதந்திராதேவியிடம் புகார் அளித்தார் ,புகாரைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் சொரிமுத்து,முருகன்,காவலர்கள் ஜோதிமுருகன்,ஐயப்பன்  குழுவினர் இரண்டுநபர்களையும் கைது செய்தனர்.

வாடகைக்கு கொடுத்த கோழிபபண்ணையில் கோழி திருடிய உரிமையாளர் கைது.
 

Tags :

Share via