ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு

by Staff / 20-04-2023 12:00:16pm
ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு

பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சூரத் அமர்வு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. மேல்முறையீட்டு மனு மீதான வாதம் முடிந்தது. இந்த மனுவில் சாதகமான தீர்ப்பு வந்தால், ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவியை திரும்ப பெற அது வழி வகுக்கும். இந்த வழக்கில் ராகுல் காந்தி இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

 

Tags :

Share via