கோர விபத்து - 7 பேர் பலி

by Staff / 22-04-2023 12:06:14pm
கோர விபத்து - 7 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. அயோத்தியில் இருந்து அம்பேத்கர் நகர் நோக்கி சென்ற பேருந்து, எதிரே வந்த லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இதில் 40 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜேசிபிகள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via