12 மணி நேர வேலை... திருமாவளவன் எதிர்ப்பு
தொழிலாளர்கள் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் 1923இல் சிங்காரவேலரின் முயற்சியால், தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை கொண்டுவரப்பட்டது. அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்நேரத்தில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை திமுக அரசு எதற்காக நிறைவேற்றியது என்பது புரியாத புதிராக உள்ளதாக என குறிப்பிட்டிருந்தார்.
Tags :