7வது நாளாக வருமான வரித்துறை சோதனை
ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. மேலும், கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை, கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி குவித்துள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
Tags :