சென்னை கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம் .
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் இருந்து வளசரவாக்கம் வரை கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்பொழுது கோடம்பாக்கம் டிரஸ்ட் அம்பேத்கார் சிலையிலிருந்து லிபர்ட்டி திரையரங்கு வரையிலான பகுதியில் மெட்ரோ ரயில் பணி தொடங்க இருப்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.பொதுமக்கள்,வாகன ஓட்டிகளுக்கு ஒரு வாரம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த பணி முடியும் வரை போக்குவரத்து மாற்றப்பட்ட நிலையிலே தொடரும் என்று போக்குவரத்து காவல் துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது..
கோடம்பாக்கம் ரோட்டில் இருந்து யுனெய்டெட் இந்தியா காலனி , ரங்கராஜபுரம் வழியாக அசோக்நகா் அம்பேத்கர் சிலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றம் . செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து பணிக்காக, போக்குவரத்து காவலர்கள் 20 பேரும் சி. எம். ஆர் பணியாளர்கள் 35 பேருமாக 55 பேர் போக்குவரத்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Tags :