நாளை காலை 9:30 மணி அளவில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியீடு

by Admin / 07-05-2023 07:24:46pm
நாளை காலை 9:30 மணி அளவில்  பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியீடு

நாளை காலை 9:30 மணி அளவில் ,தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவை அறிவிக்க உள்ளது. பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வரை நடந்தது .சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினர். 3169 தேர்வு மையங்களில்  தேர்வு நடத்தப்பட்டது.  தேர்வு முடிவை நாளை  திங்கட்கிழமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிடுகிறார். இணையதளம்  வழியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 tnresults.nic.in

- dge1.tn.nic.in

- dge2.tn.nic.in

- dge.tn.gov.in

பள்ளியில் கொடுக்கப்பட்ட செல்லிடை பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்புவதற்கும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் மாவட்டம் தோறும் பள்ளிகளில் பெற்ற மதிப்பெண்களை பற்றி அறிவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.. தேர்வு முடிவை அறிந்து கொள்வதற்கு மாணவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவு சீட்டு எண், பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.

 

Tags :

Share via