ஓ பன்னீர்செல்வம்- டிடிவி தினகரன் சந்திப்பு
அடையாறில் உள்ளஅம்மா முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்தில்அதிமுகவினுடைய அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் திடீரென்று சந்தித்தார். தினகரனுக்கு பூங்கொத்து கொடுக்க , தினகரன் ஓ. பன்னீர்செல்வத்திற்கு சால்வைஅணிவித்து வரவேற்றார் .உடன் பண்ருட்டி ராமச்சந்திரன்சென்றிருந்தாா்.
கடந்த ஆண்டு அதிமுக பொது குழு கூடிய பொழுது ஓ பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார் .அதன் பின்பு இரு தரப்புக்கும் இடையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருந்த பொழுது.... உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததோடு தேர்தல் ஆணையமும் அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு இரட்டை இலை சின்னத்தை அவருக்கு வழங்கியது. இந்நிலையில், திருச்சியில் பிரம்மாண்ட ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய தன்னுடைய பலத்தை நிரூபித்த ஓ பன்னீர்செல்வம் ,இப்பொழுது திடீரென்று டிடிவி தினகரனை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..டி.டி.வி. தினகரன் சந்திப்பிற்கு பின்பு ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க கூடும் என்கிற கருத்து நிலவுகிறது. ஓ பன்னீர்செல்வம்- டிடிவி தினகரன்கூட்டாக போட்டி அளித்தனா்.
புரட்சித்தலைவர்-அம்மாவின்இயக்கத்தை மீட்டெடுத்து தீய சக்தி திமுகவை வீழ்த்த உண்மையான அம்மாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகின்ற விதமாக மீட்டெடுப்பதற்காக முயற்சியிலே நானும் சகோதரர் ஓபிஎஸ் அவர்களும் சேர்ந்து இரு இயக்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிற முடிவெடுக்கப்பட்டுள்ளது.. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இணைந்து அதிமுகவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Tags :