போதைக்காக மாத்திரை விற்றவர்கள் கைது.

by Staff / 13-05-2023 04:50:32pm
போதைக்காக மாத்திரை விற்றவர்கள் கைது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில காலங்களாகவே போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பது பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் கணேஷ் பாபு, சரவணன், கணேஷ்குமார், ஜான் ஜோசப் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர். மேலும் மணி சேகர் மற்றும் கண்ணன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விடுபட்டவர்களிடம் இருந்து 85 டேபண்ட்டால் மாத்திரைகள், 1 சிரஞ், 4 செல்போன்கள், 1 கார், 1 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via