சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். டாஸ்மாக் மதுக்கடைகள், டாஸ்மாக் நிர்வாக பணிகள், மேலாளர் நியமனம் உள்ளிட்டவை பற்றி சவுக்கு சங்கர் சமீபத்தில் பேசியிருந்தார். இந்த சூழலில் உண்மைக்கு புறம்பாக சவுக்கு சங்கர் அவதூறு பரப்பும் வகையில் ஆதாரம் இன்றி பேசுவதாக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tags :