சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்

by Staff / 16-05-2023 02:55:41pm
சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்

கள்ளச்சாராயம் குடித்து செங்கல்பட்டில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், ஜம்பு, அஞ்சலை, சங்கர், சந்திரன், ராஜி, முத்து ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் முன்னாள் அமைச்சர்கள் சின்னையா, சோமசுந்தரம், விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

Tags :

Share via