அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டை அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 71 மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியினுடைய மாநில மாவட்ட நிர்வாகிகளும் அவைத் தலைவர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.. கூட்டத்திற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம் ஜி ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ..கூட்டத்தில்புதிய உறுப்பினர் சேர்க்கை, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பிரம்மாண்டமான மாநாட்டு சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டதாகவும் விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் சூழலும் தற்போதைய அரசியல் சூழல்கள் பற்றியும் விரிவான அளவில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதாகவும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தகவல்.
Tags :