கடமைத்தவறியதற்காக இடமாற்றம்-வேதனையில் விஷம் குடித்த சிறப்பு உதவி ஆய்வாளர்
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் காவல்நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரிட்டோ என்பவர் அந்தப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றுவருவதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவரை பணிமாற்றம் செய்தார்.இதன்தொடர்ச்சியாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட உதவி ஆய்வாளர் பிரிட்டோ தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் சாலைக்கிராமத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
Tags : வேதனையில் விஷம் குடித்த சிறப்பு உதவி ஆய்வாளர்