நெல்லை டவுணில் மர்மகும்பலால் வெட்டப்பட்ட வாலிபர் பலி
நெல்லை டவுணில் வெங்கடேஷ் என்பவரை நேற்று இரவு அரிவாளால் வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது.மர்மகும்பலின் தாக்குதலில் உயிருக்கு போராடிய வெங்கடேஷ் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே நெல்லை தாழையூத்தில் நேற்று 3பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் 4 வதாக இந்த கொலையும் நடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர நடவடிக்களை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags :