4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்

by Writer / 18-04-2022 09:48:53am
 4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்

 மத்தியஅரசாங்கத்தின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது   இறந்துள்ளனர் என்று காங்கிரஸ் முன்னால்தலைவர் ராகுல் காந்தி  மத்திய அரசை கடுமையாகவிமா்சித்துள்ளாா்.  , உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ம் கோரிக்கை விடுத்தார்.நியூயார்க் டைம்ஸ் யின் 'ஸ்கிரீன்ஷாட்டை' ராகுல் ட்விட்டரில்பதிவிட்டுள்ளாா்   உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய கோவிட் இறப்பு தரவுகளை பகிரங்கப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தடுக்கிறது என்று கூறிய ராகுல் காந்தி , 'மோடிஜி உண்மையை பேசுவதில்லை, பேச அனுமதிப்பதும் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று இன்னும் பொய் சொல்கிறார்கள்!   'நானும் முன்பே கூறியிருந்தேன் - கோவிட் பாதிப்பில்அரசின் அலட்சியத்தால், 5 லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். கடமையைச் செய்யுங்கள், மோடி ஜி - பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்என்றும்பதிவிட்டுள்ளாா் .

 4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்
 

Tags :

Share via