உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்

by Editor / 01-09-2021 07:02:35pm
உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்

புதுடெல்லியில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் புதிதாக பதவியேற்றனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா புதிய நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் 9 பேர் ஒரே நாளில் நீதிபதிகளாக புதிதாக பதவியேற்பது இதுவே முதல் தடவையாகும். இன்று பதவி ஏற்கும் ஒன்பது நீதிபதிகளில் 3 பெண் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரில் நீதிபதி நாகரத்னா 2027ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது

 

Tags :

Share via