மணீஷ் சிசோடியா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது, டெல்லி உயர் நீதி மன்றம்.

by Admin / 30-05-2023 07:02:07pm
 மணீஷ் சிசோடியா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது, டெல்லி உயர் நீதி மன்றம்.

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது .கடந்த 2001 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி பொறுப்பேற்றவுடன் புதிய மதுபான கொள்கையை அமுல்படுத்தியது. அதன்படி 849 தனியார் நிறுவனங்கள் மதுபானை கடைகள் நடத்துவதற்கான உரிமங்களை பெற்றன .இவ்வுாிமம் வழங்குவதில் ஆம் ஆத்மினுடைய துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சி.பி.ஐ கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்தது. இதனை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிசோடியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து அவர் மனுவை தள்ளுபடி செய்தது.

 

Tags :

Share via