கழிவறை பயன்படுத்துவதில் தகராறு.. ஒருவர் கொலை ஒருவர் கைது

by Staff / 01-06-2023 01:32:52pm
கழிவறை பயன்படுத்துவதில் தகராறு.. ஒருவர் கொலை ஒருவர் கைது

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடையில் தொழிலாளி ராதாகிருஷ்ணன் (47) கொச்சி அருகே கூத்தாட்டுகுளத்தில் உள்ள வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராதாகிருஷ்ணனுடன் வசித்து வந்த சக தொழிலாளியான தமிழகத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இருவருக்குமிடையே கழிவறையை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராதாகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார். ராதாகிருஷ்ணனின் தலையில் ரத்தக்காயம் இருந்தது. மேலும், அறையில் இருந்த தமிழகத்தை சேர்ந்தவர் காணாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தென்காசியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via