மது போதைக்கு அடிமையான மகன் மயங்கி விழுந்து பலி

by Staff / 05-10-2022 04:45:50pm
மது போதைக்கு அடிமையான மகன் மயங்கி விழுந்து பலி

மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த சில தினங்களாகவே மது போதைக்கு அடிமையாகி தனிமையில் வசித்து வந்துள்ளார் .

இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர் .

இந்த நிலையில் அவருடைய தாயார் வளர்மதி அளித்த புகாரி அடிப்படையில் எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via