ஆந்திரா: ஓடும் ரயில் தீ விபத்து

by Staff / 05-06-2023 03:43:43pm
ஆந்திரா: ஓடும் ரயில் தீ விபத்து

ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மச்சிலிப்பட்டினம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் செயினை இழுத்து ரயிலை நிறுத்தினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சக்கரங்கள் உராய்ந்து தீப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓடும் ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via