பைக் மீது வேன் மோதி இளநீர் வியாபாரி பரிதாபமாக பலி

by Editor / 30-06-2023 12:25:15am
பைக் மீது வேன் மோதி இளநீர் வியாபாரி பரிதாபமாக பலி தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலு மகன் சுப்பிரமணி (55).<br /> இவருக்கு பாக்கியம் என்ற மனைவியும் சுமதி என்ற மகளும், வேல்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணி தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு &nbsp;பாரதி நகரில் குடும்பத்துடன் தங்கி கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று கண்ணாடி குளத்தில் ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு தனது இரு சக்கர &nbsp;வாகனத்தில் இரவ 9 மணியளவில்ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊத்துமலைக்கு &nbsp;திரும்பி கொண்டு இருந்த &nbsp;வேன் மோதியதில் சுப்பிரமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து பற்றி அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு &nbsp;விரைந்து வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Tags :

Share via