காவல்துறையினர் முன்னைலையில் பாஜகவினருக்கு அடி உதை கார் உடைப்பு.

by Editor / 03-07-2023 08:21:24am
காவல்துறையினர் முன்னைலையில் பாஜகவினருக்கு அடி உதை கார் உடைப்பு. தென்காசி மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அருகே பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு காரில் சென்றவர்களை திமுகவினர் போலீசாரின் கண் முன்னே சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. &nbsp;தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்டம் முடித்த பிறகு ஆர் எஸ் பாரதி காரில் ஏறி புறப்பட்டபோது நெல்லை தென்காசி சாலையில் வெள்ளை நிற காரில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் குற்றால அருவியில் &nbsp;குளிப்பதற்காக &nbsp;செல்லும் பொழுது சாலையோரம் திமுகவின் கொடிகள் மற்றும் கூட்டத்தை கண்டதும் பாரத் மாதா கி ஜெய் என கோசம் இட்டவாறு காரில் சென்றனர். அப்பொழுது சாலையில் கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த திமுகவினர் பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு சென்ற காரை மரித்து எவ்வாறு திமுக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பாரத் மாதா கி ஜெய் என கூறுவாய் என கூறி காருக்குள் இருந்த நபர்களை 30க்கும் மேற்பட்ட திமுகவினர் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். மேலும் காரை எட்டி உதைத்தும் கண்ணாடியை உடைத்தும் பயங்கர தாக்குதல் செருப்பால் அடித்தும்,விரட்டியுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றும் ஆக்ரோசத்துடன் திமுகவினர் அந்தக் காரில் இருந்தவர்களையும் காரையும் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தனர். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் கூடுதல் போலீசார் வந்து காரில் இருந்தவர்களை அங்கிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தியதோடு திமுகவினரையும் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஒரு வழியாக காரை போலீசார் சம்பவ இடத்திலிருந்து &nbsp; அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பாவூர்சத்திரத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலிருந்து தென்காசியில் உள்ள குற்றால அருவிக்கு குளிக்க சென்ற நபர்கள் தான் பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டது தெரியவந்தது.<br /> &nbsp;பாவூர்சத்திரத்தில் திமுக பொதுக்கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் வழியில் காரில் வந்த நபர்கள் திடீரென பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டதாலும் அதற்கு திமுகவினர் காரை வழிமறித்து காரில் இருந்தவர்களை அடித்து உதைத்ததோடு கார் கண்ணாடியையும் உடைத்து செருப்பால் தாக்கிய சம்பவம் &nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாரும் சம்பவ இடத்தில் இருந்தும் அவர்கள் முன்பு திமுகவினர் தாக்குதலில் ஈடுப்பாட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர்.இவர்களது தங்க சங்கிலி,செல்[போன்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.வழக்கு எதுவும் போடவில்லை.இரண்டுதரப்பும் புகார் கொடுக்க வில்லை..
 

Tags :

Share via