குழந்தையின் கை அகற்றம் - விசாரணை நிறைவு

by Staff / 04-07-2023 03:55:06pm
குழந்தையின் கை அகற்றம் - விசாரணை நிறைவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள ஒன்றரை வயது குழந்தைக்கு கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை அழுகியதால் மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்றி உள்ளனர். இந்நிலையில், குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர் மற்றும் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவக்குழு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலை 10.20 மணிக்கு தொடங்கிய விசாரணை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 

Tags :

Share via