அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை தீர்ப்பு

by Staff / 05-07-2023 05:14:22pm
அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை தீர்ப்பு அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 

Tags :

Share via